Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4083
அரைசேநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் 

அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகமகிழ்தல்வேண்டும் 
வரைசேர்எவ் வுலகமும்ஓர் ஒழுக்கமுறல் வேண்டும் 

மடிந்தாரை மீளவும்நான் வருவித்தல் வேண்டும் 
புரைசேரும் கொலைநெறியும் புலைநெறியும் சிறிதும் 

பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும் 
உரைசேர்மெய்த் திருவடிவில் எந்தாயும் நானும் 

ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.