Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3175
அறங்கனிந்த அருட்கொடிஎன் அம்மைஅமு தளித்தாள்

அகிலாண்ட வல்லிசிவா னந்திசௌந் தரிசீர்த்
திறங்கலந்த நாதமணிச் சிலம்பணிந்த பதத்தாள்

சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
மறங்கனிந்தார் மயக்கமெலாந் தெளியமணிப் பொதுவில்

மாநடஞ்செய் துரையேநின் வண்மைதனை அடியேன்
புறங்கவியப் பாடுகின்றேன் அகங்கவியப் பாடும்

புண்ணியரெல் லாம்இவன்ஓர் புதியன்எனக் கொளவே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.