அலங்கும் புனற்செய் யொற்றியுளீ ரயன்மா லாதி யாவர்கட்கும் இலங்கு மைகா ணீரென்றே னிதன்முன் னேழ்நீ கொண்டதென்றார் துலங்கு மதுதா னென்னென்றேன் சுட்டென் றுரைத்தா ராகெட்டேன் அலங்கற் குழலா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே