அளத்திலே படிந்த துரும்பினும் கடையேன் அசடனேன் அறிவிலேன்உலகில் குளத்திலே குளிப்பார் குளிக்கவெஞ் சிறுநீர்க் குழியிலே குளித்தவெங் கொடியேன் வளத்திலே பொசித்துத் தளத்திலே படுக்க மனங்கொணட சிறியேனன் மாயைக் களத்திலே பயின்ற உளத்திலே பெரியன் என்னினும் காத்தருள் எனையே