Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5469
அளந்திடுவே தாகமத்தின் அடியும்நடு முடியும் 

அப்புறமும் அப்பாலும் அதன்மேலும் விளங்கி 
வளர்ந்திடுசிற் றம்பலத்தே வயங்கியபே ரொளியே 

மாற்றறியாப் பொன்னேஎன் மன்னேகண் மணியே 
தளர்ந்தஎனை அக்கணத்தே தளர்வொழித்தா னந்தம் 

தந்தபெருந் தகையேஎன் தனித்ததனித் துணைவா 
உளந்தருசம் மதமான பணிஇட்டாய் எனக்கே 

உன்பணியே பணியல்லால் என்பணிவே றிலையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.