அளிக்குங் குணத்தீர் திருவொற்றி யழக ரேநீ ரணிவேணி வெளிக்கொண் முடிமே லணிந்ததுதான் விளியா விளம்பத் திரமென்றேன் விளிக்கு மிளம்பத் திரமுமுடி மேலே மிலைந்தாம் விளங்கிழைநீ யெளிக்கொண் டுரையே லென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ