ஆக்கல்ஒன் றோதொழில் ஐந்தையும் தந்திந்த அண்டபிண்ட வீக்கம்எல் லாம்சென்றுன் இச்சையின் வண்ணம் விளங்குகநீ ஏக்கமு றேல்என் றுரைத்தருட் சோதியும் ஈந்தெனக்கே ஊக்கமெ லாம்உற உட்கலந் தான்என் உடையவனே