ஆடல் அழகர் அம்பலத்தார் ஐயா றுடையார் அன்பர்களோ(டு) ஊடல் அறியார் ஒற்றியினார் உவகை ஓங்க உற்றிலரே வாடல் எனவே எனைத்தேற்று வாரை அறியேன் வாய்ந்தவரைத் தேடல் அறியேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே