Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3128
ஆதியிலே கலப்பொழிய ஆன்மசுத்தி அளித்தாங்

கதுஅதுஆக் குவதொன்றாம் அதுஅதுவாய் ஆக்கும்
சோதியிலே தானாகிச் சூழ்வதொன்றாம் என்று

சூழ்ச்சிஅறிந் தோர்புகலும் துணையடிகள் வருந்த
வீதியிலே நடந்தடியேன் இருக்கும்இடந் தேடி

விரும்பிஅடைந் தெனைக்கூவி விளைவொன்று கொடுத்தாய்
பாதியிலே ஒன்றான பசுபதிநின் கருணைப்

பண்பைஅறிந் தேன்ஒழியா நண்பைஅடைந் தேனே
பாடல் எண் :4183
ஆதியிலே எனையாண்டென் அறிவகத்தே அமர்ந்த 

அப்பாஎன் அன்பேஎன் ஆருயிரே அமுதே 
வீதியிலே விளையாடித் திரிந்தபிள்ளைப் பருவம் 

மிகப்பெரிய பருவம்என வியந்தருளி அருளாம் 
சோதியிலே விழைவுறச்செய் தினியமொழி மாலை 

தொடுத்திடச்செய் தணிந்துகொண்ட துரையேசிற் பொதுவாம் 
நீதியிலே நிறைந்தநடத் தரசேஇன் றடியேன் 

நிகழ்த்தியசொன் மாலையும்நீ திகழ்த்திஅணிந் தருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.