Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3145
ஆதியுமாய் அந்தமுமாய் நடுவாகி ஆதி

அந்தநடு வில்லாத மந்தணவான் பொருளாய்ச்
சோதியுமாய்ச் சோதியெலாந் தோன்றுபர மாகித்

துரியமுமாய் விளங்குகின்ற துணையடிகள் வருந்த
பாதியிர விடைநடந்து நான்இருக்கும் இடத்தே

படர்ந்துதெருக் கதவங்காப் பவிழ்த்திடவும் புரிந்து
ஓதியிலங் கெனையழைத்தென் கரத்தொன்று கொடுத்தாய்

உடையவநின் அருட்பெருமை என்னுரைப்பேன் உவந்தே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.