ஆதியை ஆதி அந்தமீ தெனஉள் அறிவித்த அறிவைஎன் அன்பைச் சோதியை எனது துணையைஎன் சுகத்தைச் சுத்தசன் மார்க்கத்தின் துணிபை நீதியை எல்லா நிலைகளும் கடந்த நிலையிலே நிறைந்தமா நிதியை ஓதியை ஓதா துணர்த்திய வெளியை ஒளிதனைக் கண்டுகொண் டேனே