ஆயகால் இருந்தும் நடந்திட வலியில் லாமையால் அழுங்குவார் எனஉண் மேயகால் இருந்தும் திருவருள் உறஓர் விருப்பிலா மையின்மிக மெலிந்தேன் தீயகான் விலங்கைத் தூயமா னிடஞ்செய் சித்தனே சத்திய சபைக்கு நாயகா உயிர்க்கு நயகா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே