ஆயாது நான்செயும் குற்றங் களைக்கண் டறியில்பெற்ற தாயாயி னும்பொறுப் பாளல ஆங்கவை சற்றலவே ஓயாது செய்யுந் தொறும்பொறுத் தாளும் உனைஎளியேன் வாயால் உரைக்கவும் மாட்டேன்அந் தோஎன்ன வன்மைஇதே