ஆர்த்தார் கடல்நஞ் சமுதுசெய் தாய்என்னை அன்பர்கள்பால் சேர்த்தாய்என் துன்பம் அனைத்தையும் தீர்த்துத் திருஅருட்கண் பார்த்தாய் பரம குருவாகி என்னுள் பரிந்தமர்ந்த தீர்த்தா வயித்திய நாதா அமரர் சிகாமணியே