ஆர்ப்பார் கடல்நஞ் சமுதுசெய் தாய்நின் அடிக்கன்பின்றி வேர்ப்பார் தமக்கும் விருந்தளித் தாய்வெள்ளி வெற்பெடுத்த கார்ப்பாள னுக்கும் கருணைசெய் தாய்கடை யேன்துயரும் தீர்ப்பாய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே