ஆறத் துயரம் தருங்கொடியார்க் காளாய் உழன்றிங் கலையாதே கூறாப் பெருமை நின்அடியார் கூட்டத் துடன்போய்க் குலாவும்வண்ணம் தேறாப் பொருளாம் சிவத்தொழுகும் தேனே தணிகைத் திருமலைவாழ் மாறாச் சுகமே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே