ஆளுடையாய் சிறியேன்நான் அருளருமை அறியேன் அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து வாளுடையேன்() தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும் நீளுடைய கண்களும்விட் டகலாதே இன்னும் நிகழ்கின்ற தாயினும்என் நெஞ்சம்உரு கிலதே ஏளுடைய மலையும்இதற் குருகல்அரி தலவே இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே வாள் - ஒளி, பட்டயம் சமுக