Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4635
ஆவாஎன் றெனையாட்கொண் டருளியதெள் ளமுதே 

அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே 
சாவாத வரம்எனக்குத் தந்தபெருந் தகையே 

தயாநிதியே சிற்சபையில் தனித்தபெரும் பதியே 
ஓவாதென் உள்ளகத்தே ஊற்றெழும்பேர் அன்பே 

உள்ளபடி என்னறிவில் உள்ளபெருஞ் சுகமே 
நீவாஎன் மொழிகளெலாம் நிலைத்தபயன் பெறவே 

நித்திரைதீர்ந் தேன்இரவு நீங்கிவிடிந் ததுவே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.