Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3712
இகத்திருந்த வண்ணம்எலாம் மிகத்திருந்த அருட்பேர் 

இன்பவடி வம்சிறியேன் முன்புரிந்த தவத்தால் 
சகத்திருந்தார் காணாதே சிறிதுகண்டு கொண்ட 

தரம்நினைந்து பெரிதின்னும் தான்காண்பேம் என்றே 
அகத்திருந்த எனைப்புறத்தே இழுத்துவிடுத் ததுதான் 

ஆண்டவநின் அருட்செயலோ மருட்செயலோ அறியேன் 
மகத்திருந்தார் என்அளவில் என்நினைப்பார் அந்தோ 

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.