இகத்துழல் பகுதித் தேவர்இந் திரன்மால் பிரமன்ஈ சானனே முதலாம் மகத்துழல் சமய வானவர் மன்றின் மலரடிப் பாதுகைப் புறத்தும் புகத்தரம் பொருந்தா மலத்துறு சிறிய புழுக்கள்என் றறிந்தனன் அதன்மேல் செகத்தொடர் பிகந்தார் உளத்தமர் ஒளியில் தெரிந்தனன் திருவடி நிலையே