இச்சைவே றில்லைஇங் கென்கருத் தெல்லாம் என்னுள் அமர்ந்தறிந் தேஇருக் கின்றீர் விச்சை எலாம்வல்ல நுந்திருச் சமுக விண்ணப்பம் என்னுடல் ஆதியை நுமக்கே நிச்சலும் தந்தனன் என்வசம் இன்றி நின்றனன் என்றனை நீர்செய்வ தெல்லாம் எச்செயல் ஆயினும் செய்துகொள் கிற்பீர் எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே சமுகம் - ச மு க பதிப்பு