இடைக்கொடி வாமத் திறைவாமெய்ஞ் ஞானிகட் கின்பநல்கும் விடைக்கொடி ஏந்தும் வலத்தாய்நின் நாமம் வியந்துரையார் கடைக்கொடி போலக் கதறுகின் றார்பொய்க் கதையவர்தாம் புடைக்கொடி யாலன்றிப் புல்லால் எயிலைப் புனைபவரே