இணைஎன்று தான்தனக் கேற்றது போற்றும் எனக்குநல்ல துணைஎன்று வந்தது சுத்தசன் மார்க்கத்தில் தோய்ந்ததென்னை அணைஎன் றணைத்துக்கொண் டைந்தொழில் ஈந்த தருளுலகில் திணைஐந்து மாகிய துத்தர ஞான சிதம்பரமே