இந்நாள் அடியேன் பிழைத்தபிழை எண்ணி இரங்காய் எனில்அந்தோ அந்நாள் அடிமை கொண்டனையே பிழையா தொன்றும் அறிந்திலையோ பொன்னார் கருணைக் கடல்இன்று புதிதோ பிறர்பால் போயிற்றோ என்நா யகனே திருஆரூர் எந்தாய் உள்ளம் இரங்கிலையே