Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3296
இனித்தபழச் சாறுவிடுத் திழித்தமலங் கொளும்ஓர்

இழிவிலங்கில் இழிந்துநின்றேன் இரக்கம்ஒன்றும் இல்லேன்
அனித்தநெறி யிடைத்தொடர்ந்து மனித்தஉடம் பெடுத்த

அறக்கடையர் தமக்கெல்லாம் அறக்கடையன் ஆனேன்
பனித்தமனக் குரங்காட்டிப் பலிக்குழலும் கொடியேன்

பாதகமும் சூதகமும் பயின்றபெறும் படிறேன்
தனித்தகடுங் குணத்தேன்நான் ஏன்பிறந்தேன் நினது

தனிக்கருத்தை அறிந்திலேன் சபைக்கேற்றும் ஒளியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.