இனிப்பிரிந் திறையும் இருக்கலேன் பிரிவை எண்ணினும் ஐயவோ மயங்கிப் பனிப்பில்என் உடம்பும் உயிரும்உள் உணர்வும் பரதவிப் பதைஅறிந் திலையோ தனிப்படு ஞான வெளியிலே இன்பத் தனிநடம் புரிதனித் தலைவா கனிப்பயன் தருதற் கிதுதகு தருணம் கலந்தருள் கலந்தருள் எனையே