இனியே இறையும் சகிப்பறி யேன்எனக் கின்பநல்கும் கனியேஎன் தன்இரு கண்ணேமுக் கண்கொண்ட கற்பகமே தனியேஎன் அன்புடைத் தாயேசிற் றம்பலம் சார்தந்தையே முனியேல் அருள்க அருள்கமெய்ஞ் ஞானம் முழுதையுமே