இன்பாட்டுத் தொழிற்பொதுவில் இயற்றுகின்ற எம்பெருமான் உன்பாட்டுக் குவப்புறல்போல் ஊர்பாட்டுக் குவந்திலர்என் றென்பாட்டுக் கிசைப்பினும்என் இடும்பாட்டுக் கரணமெலாம் அன்பாட்டுக் கிசைவதுகாண் அருட்பாட்டுப் பெருந்தகையே