Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5425
இன்பிலே வயங்கும் சிவபரம் பொருளே 

என்உயிர்க் கமுதமே என்தன் 
அன்பிலே பழுத்த தனிப்பெரும் பழமே 

அருள்நடம் புரியும்என் அரசே 
வன்பிலே விளைந்த மாயையும் வினையும் 

மடிந்தன விடிந்ததால் இரவும் 
துன்பிலேன் இனிநான் அருட்பெருஞ் சோதிச் 

சூழலில் துலங்குகின் றேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.