இன்புறும் உணவு கொண்டபோ தெல்லாம் இச்சுகத் தால்இனி யாது துன்புறுங் கொல்லோ என்றுளம் நடுங்கிச் சூழ்வெறு வயிற்றொடும் இருந்தேன் அன்பிலே அன்பர் கொடுத்தவை எல்லாம் ஐயகோ தெய்வமே இவற்றால் வன்புறச் செய்யேல் என்றுளம் பயந்து வாங்கியுண் டிருந்தனன் எந்தாய் ஐயவோ - படிவேறுபாடு ஆ பா