Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5786
இரவகத்தே கணவரொடு கலக்கின்றார் உலகர் 

இயல்அறியார் உயல்அறியார் மயல்ஒன்றே அறிவார் 
கரவகத்தே கள்உண்டு மயங்கிநிற்கும் தருணம் 

கனிகொடுத்தால் உண்டுசுவை கண்டுகளிப் பாரோ 
துரவகத்தே விழுந்தார்போன் றிவர்கூடும் கலப்பில் 

சுகம்ஒன்றும் இல்லையடி துன்பம்அதே கண்டார் 
உரவகத்தே என்கணவர் காலையில்என் னுடனே 

உறுகலப்பால் உறுசுகந்தான் உரைப்பரிதாம் தோழி

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.