இரவில்அடி வருந்தநடந் தெழிற்கதவந் திறப்பித் தெனைஅழைத்து மகனேநீ இவ்வுலகிற் சிறிதும் கரவிடைநெஞ் சயர்ந்திளைத்துக் கலங்காதே இதனைக் களிப்பொடுவாங் கெனஎனது கைதனிலே கொடுத்து உரவிடைஇங் குறைகமகிழ்ந் தெனத்திருவாய் மலர்ந்த உன்னுடைய பெருங்கருணைக் கொப்பிலைஎன் புகல்வேன் அரவிடையில் அசைந்தாட அம்பலத்தி னடுவே ஆனந்தத் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே