இருமையும் ஒருமை தன்னில் ஈந்தனை எந்தாய் உன்றன் பெருமைஎன் என்று நான்தான் பேசுவேன் பேதம் இன்றி உரிமையால் யானும் நீயும் ஒன்றெனக் கலந்து கொண்ட ஒருமையை நினைக்கின் றேன்என் உள்ளகந் தழைக்கின் றேனே திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- நடராசபதி மாலை பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்