Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4137
இருள்இரவில் ஒருமூலைத் திண்ணையில்நான் பசித்தே 

இளைப்புடனே படுத்திருக்க எனைத்தேடி வந்தே 
பொருள்உணவு கொடுத்துண்ணச் செய்வித்தே பசியைப் 

போக்கிஅருள் புரிந்தஎன்றன் புண்ணியநற் றுணையே 
மருள்இரவு நீக்கிஎல்லா வாழ்வும்எனக் கருளி 

மணிமேடை நடுஇருக்க வைத்தஒரு மணியே 
அருள்உணவும் அளித்தென்னை ஆட்கொண்ட சிவமே 

அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.