Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3072
இருள்நிறைந்த இரவில்அடி வருந்தநடந் தடியேன்

இருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து
மருள்நிறைந்த மனத்தாலே மயங்குகின்ற மகனே

மயங்காதே என்றென்னை வரவழைத்துப் புகன்று
தெருள்நிறைந்த தொன்றெனது செங்கைதனிற் கொடுத்துத்

திகழ்ந்துநின்ற பரம்பொருள்நின் திருவருள்என் னென்பேன்
அருள்நிறைந்த மெய்ப்பொருளே அடிமுடிஒன் றில்லா

ஆனந்த மன்றில்நடம் ஆடுகின்ற அரசே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.