இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்இந்த உடம்பே இயற்கைஉடம் பாகஅருள் இன்னமுதம் அளித்தென் புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும் பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன் பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம் திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே