Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3988
இறையளவும் துரிசிலதாய்த் தூய்மையதாய் நிறைவாய் 

இயற்கையதாய் அனுபவங்கள் எவைக்கும்முத லிடமாய் 
மறைமுடியோ டாகமத்தின் மணிமுடிமேல் முடியாய் 

மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணிமேடை அமர்ந்த 
நிறையருட்சீ ரடிமலர்கள் சிவந்திடவந் தடியேன் 

நினைத்தஎலாம் கொடுத்தருளி நிலைபெறச்செய் தனையே 
குறைவிலதிப் பெருவரந்தான் போதாதோ அரசே 

கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.