இறையளவும் துரிசிலதாய்த் தூய்மையதாய் நிறைவாய் இயற்கையதாய் அனுபவங்கள் எவைக்கும்முத லிடமாய் மறைமுடியோ டாகமத்தின் மணிமுடிமேல் முடியாய் மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணிமேடை அமர்ந்த நிறையருட்சீ ரடிமலர்கள் சிவந்திடவந் தடியேன் நினைத்தஎலாம் கொடுத்தருளி நிலைபெறச்செய் தனையே குறைவிலதிப் பெருவரந்தான் போதாதோ அரசே கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே