இலமே செறித்தார் தாயர்இனி என்செய் குவதென் றிருந்தேற்கு நலமே தருவார் போல்வந்தென் நலமே கொண்டு நழுவினர்காண் உலமே அனைய திருத்தோளார் ஒற்றித் தியாகப் பெருமானார் வலமே வலம்என்அ வலம்அவலம் மாதே இனிஎன் வழுத்துவதே