இல்லையே என்திங் கில்லை என்றருள் நல்லையே நீஅருள் நயந்து நல்கினால் கல்லையே அனையஎன் கன்ம நெஞ்சகம் ஒல்லையே வஞ்சம்விட் டுவக்கும் உண்மையே