இளிவே தவிர்த்துச் சிறியேன்தன் எண்ணம் முழுதும் அளித்தருளித் தெளிவே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே ஒளிவேய் வடிவு பெற்றோங்கி உடையாய் உன்பால் வளர்கின்றேன் தளிவேய் நினது புகழ்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே