ஈதுகேள் மகனே மெய்யருள் திருவை இரண்டரைக் கடிகையில் நினக்கே ஊதியம் பெறவே மணம்புரி விப்பாம் உண்மைஈ தாதலால் இனிவீண் போதுபோக் காமல் மங்கலக் கோலம் புனைந்துளம் மகிழ்கநீ என்றார் தீதுதீர்த் தென்னை இளந்தையில் தானே தெருட்டிய சிற்சபை யவரே