ஈனமெலாம் தீர்ந்தனவே இன்பமெலாம் எய்தினவே ஊனமெலாம் கைவிட் டொழிந்தனவே - ஞானமுளோர் போற்றும்சிற் றம்பலத்தும் பொன்னம்ப லத்துநடம் போற்றும் படிப்பெற்ற போது