உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம் எனவந் தோதிய வறிஞருக் கேதும் கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பிலேன் உலகில் குணம்பெரி துடையநல் லோரை அடுத்திலேன் அடுத்தற் காசையும் இல்லேன் அவனிமேல் நல்லவன் எனப்பேர் எடுத்திலேன் எனினும் தெய்வமே துணைஎன் றிருக்கின்றேன் காத்தருள் எனையே திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- அவா அறுத்தல் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்