உடையென்றும் பூணென்றும் ஊணென்றும் நாடி உழன்றிடும்இந் நடையென்றும் சஞ்சலஞ் சஞ்சலங் காணிதி னான்சிறியேன் புடையென்று வெய்ய லுறும்புழுப் போன்று புழுங்குகின்றேன் விடையென்று மாலறங் கொண்டோ யென் துன்பம் விலக்குகவே