உனக்கே விழைவுகொண் டோ லமிட் டோ ங்கி உலறுகின்றேன் எனக்கே அருள்இத் தமியேன் பிழைஉளத் தெண்ணியிடேல் புனக்கேழ் மணிவல்லி யைப்புணர்ந் தாண்டருள் புண்ணியனே மனக்கேத மாற்றும் தணிகா சலத்தமர் வானவனே