Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3130
உன்மனியின் உள்ளகத்தே ஒளிருவதொன் றாகி

உற்றஅதன் வெளிப்புறத்தே ஓங்குவதொன் றாகிச்
சின்மயமாய் விளங்குகின்ற திருவடிகள் வருந்தச்

சிறுநாயேன் பொருட்டாகத் தெருவில்நடந் தருளிப்
பொன்மயமாந் திருமேனி விளங்கஎன்பால் அடைந்து

பொருள்ஒன்றென் கைதனிலே பொருந்தஅளித் தனையே
நின்மலனே நின்னருளை என்புகல்வேன் பொதுவில்

நிறைந்தஇன்ப வடிவாகி நிருத்தம்இடும் பதியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.