Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4160
உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் 

உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப் 
பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக 

பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே 
நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான் 

நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே 
மயர்ப்பறுமெய்த்() தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும் 

மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே   

 () மயர்ப்பு - சோர்வு முதற்பதிப்பு

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.