உய்குவித்து() மெய்யடியார் தம்மை எல்லாம் உண்மைநிலை பெறஅருளும் உடையாய் இங்கே மைகுவித்த நெடுங்கண்ணார் மயக்கில் ஆழ்ந்து வருந்துகின்றேன் அல்லால்உன் மலர்த்தாள் எண்ணிக் கைகுவித்துக் கண்களில்நீர் பொழிந்து நானோர் கணமேனும் கருதிநினைக் கலந்த துண்டோ செய்குவித்துக் கொள்ளுதியோ கொள்கி லாயோ திருவுளத்தை அறியேன்என் செய்கு வேனே