உருஅண்டப் பெருமறைஎன் றுலகமெலாம் புகழ்கின்ற திருஅண்டப் பகுதிஎனும் திருஅகவல் வாய்மலர்ந்த குருஎன்றெப் பெருந்தவரும் கூறுகின்ற கோவேநீ இருஎன்ற தனிஅகவல் எண்ணம்எனக் கியம்புதியே