உருநான்கும் அருநான்கும் நடுவே நின்ற உருஅருவ மொன்றும்இவை உடன்மேல் உற்ற ஒருநான்கும் இவைகடந்த ஒன்று மாய்அவ் வொன்றினடு வாய்நடுவுள் ஒன்றாய் நின்றே இருநான்கும் அமைந்தவரை நான்கி னோடும் எண்ணான்கின் மேலிருத்தும் இறையே மாயைக் கருநான்கும் பொருணான்கும் காட்டு முக்கட் கடவுளே கடவுளர்கள் கருதுந் தேவே